என்ன மாயம் பாருங்கள் ...?

என்ன மாயம் பாருங்கள் ...?


என்னவனில் ...
அருகில் நெருங்கி இருந்தேன் ...
சற்று விலகியும் இருந்தேன் ...
என்ன மாயம் பாருங்கள் ...?


என் உடல் முழுதும் .....
என்னவன் என்னை அள்ளி ...
கொண்டதுபோல் படர்கிறது ...
பசலை (தேமல் ) நிறம் ....
காதல் செய்தால் நோய் ...
என்பது உண்மையோ ...?


திருக்குறள் : 1187
+
பசப்புறுபருவரல்
+
புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில் 
அள்ளிக்கொள் வற்றே பசப்பு.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 107

கருத்துகள்