காதல் கொடிய நோய் தானே ....!!!

காதல் கொடிய நோய் தானே ....!!!

வெறுத்து 
நீர் பிரிந்து சென்றாலும் ...
எனக்கு வேதனை தர ....
நீர் பிரிந்து சென்றாலும் ....
என் மனம் உம்மையே ...
நாடுகிறதே.....!!!

என்னதான் நீர் 
துன்பம் தந்தாலும் ...
உம்மையே சுற்றி சுற்றி ....
வரும் இந்த காதல் ....
கொடிய நோய் தானே ....!!!

குறள் 1256
+
செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ 
எற்றென்னை உற்ற துயர்.

+
நிறையழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 176

கருத்துகள்