கண்டவுடன் என் மனம் ....

கண்டவுடன் என் மனம் ....

என்னவனை ....
மறக்கமுடியாமல் ....
அவஸ்தைப்படும் ...
என் மனமோ ஒரு ....
மடந்தை ......!!!

என்னவனை .......
கண்டவுடன் என் மனம் ....
நாணத்தை மறந்து ....
கூடலையே மனமும் ....
நாடுதே .....!!!
+
குறள் 1297
+
நெஞ்சொடுபுலத்தல் 
+
நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன் 
மாணா மடநெஞ்சிற் பட்டு.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 217

கருத்துகள்